மகதத்தின் மகத்தான வித்தகனாம் ஏகலைவன் வழி நிற்கும் அரசினர் பொறியியற் கல்லூரி, கோவை யின் கலைவித்தகர்களாம் தமிழ் மற்றும் நுண்கலை மன்ற ஏகலைவர்களின் ஓர் பெரும் பெருக்கு. தாயாகிய தமிழின் தாய்மையைப் பறைசாற்றும் வகையில் கலைகள் யாவும் புது ஒளி வீசி அரங்கேறும் மாபெரும் விழா "முத்தமிழ் விழா '23". ஒளியனைத்தும் திரிந்து வண்ணங்களைப் பரிசளிக்க, அவை நம் மனதோடு இணைந்து தவழ்ந்திடும் ஓர் வண்ணவிழாவாய் இவ்வாண்டு உருவெடுத்துள்ளது. பேச்சு, கவிதை, தனி நபர் நாடகம், தனி நபர் மௌனமொழி நாடகம் போன்ற தனித்திறமைகளை வெளிப்படுத்தும் போட்டிகளும் நாடகம், மௌனமொழி நாடகம், நவீன நாடகம், தெருக்கூத்து, கிராமிய நடனம், வில்லுப்பாட்டு, பறை, சிலம்பம், பொம்மலாட்டம், ஒளி நாடகம் ஆகிய குழு நிகழ்வுகளும் நடக்கவுள்ளன. தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி மேலும் மெருகேற்றிப் பயனையடையவும் போட்டிகளில் வெற்றி கொள்பவர்களுக்குச் சான்றிதழும் பரிசுகளும் வழங்கப்படும். வேற்றுமைகள் பல இருப்பினும் தமிழால் உருவான சகோதரத்துவம் கொண்டு ஓர் குடும்பமாய் இவ்விழாவினைச் சிறப்பிக்க வாரீர்!!!
இங்கே பதிவு செய்க
Onspot Registrations Available - நேரடி பதிவுகள் வரவேற்கப்படும்
இங்கே பதிவு செய்க
Onspot Registrations Available நேரடி பதிவுகள் வரவேற்கப்படும்
ஐப்பசி 10,11
அக்டோபர் 27 மற்றும் 28
ஐப்பசி 10,11
அக்டோபர் 27 மற்றும் 28
நிமிடங்கள் : வினாடிகள்